தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஆத்தூரில் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் துணிக்கடை வைத்திருப்பவர் மகாலிங்கம். இவர் தனது கடைக்கு அருகில் கடை வைத்திருப்பவர்கள், தனது கடை முன்பு வாகனங்களை நிறுத்துவதாகவும், இதனால் தனக்கு இடையூறு ஏற்படுகிறது. போலீசார் மாமூல் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நகராட்சிஅலுவலகத்தின் 5வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை காப்பற்றினர். பின்னர் மகாலிங்கம் கைது செய்யப்பட்டார்.