வதந்தியை பரப்புவோரை கட்டுப்படுத்துங்கள்: பாகிஸ்தானிடம் இந்தியா கண்டிப்பு
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது.
இதனால் பெங்களூர், சென்னை, புனே நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இந்த அச்சமூட்டும் வதந்திகள் பாகிஸ்தானில் இருந்து பரப்பப்பட்டதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தான் மந்திரியிடம் உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கண்டிப்புடன் கூறினார்.