விமான விபத்தில் சூடான் அமைச்சர் பலி
சூடானில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு அமைச்சர் உள்பட 31 பேர் பலியாயினர். இது குறித்து சூடான் விமானப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், சூடானின் தெற்கு கோர்டாபோன் நகரில் ரம்ஜான் பண்டிகையினை கொண்டாட, அந்நாட்டு அமைச்சர் காஸி-அல்-ஷாதிக், தலைமையில் குழு ஒன்று விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றது.
தெற்கு சூடான் எல்லை அருகே ஆன்ட்நோவ், மாகாணத்தின் டாலோபி நகரின் மலையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அமைச்சர் உள்பட 31 பேர் பலியாயினர். இவ்வாறு அந்த ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கோர்டாம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.