திமுக இளைஞரணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இளைஞர் அணி பயிற்சி பாசறையில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்களை இளைஞரணியினர் பின்பற்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞரணியினருக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் சென்னை கிண்டியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தொடக்க உரையாற்றிய மு.க.ஸ்டாலின்,
புதிய நிர்வாகிகள் திராவிட இயக்க வரலாற்றினை அறிந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். இளைஞர் அணி பயிற்சி பாசறையில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்களை இளைஞரணியினர் பின்பற்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் மா.நன்னன், மொழிப்போர் என்ற தலைப்பில் திருச்சி சிவா, திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் திருச்சி செல்வேந்திரன் ஆகியோர் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.