அண்மைச் செய்திகள்
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை ||
தமிழகம்
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்)
......................................
தமிழகம் முழுவதும் கனமழை
......................................
டி.எம்.எஸ். உடலுக்கு தமிழக அமைச்சர்கள்,பிரபலங்கள் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா?
......................................
சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா
......................................
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் !
......................................
டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
......................................
குரலின் மூலம் ரசிகர்களின் மனத்திரையில் நிற்கும் ஆற்றலை பெற்றவர் டி.எம்.எஸ்: விஜயகாந்த்
......................................
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
......................................
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை
......................................
டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். : ஜெ.,
......................................
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 18, ஆகஸ்ட் 2012 (22:2 IST)



மடியில் கனம் இருப்பதால்தான் வழக்கை கண்டு ஜெயலலிதா அஞ்சுகிறார்: கலைஞர் அறிக்கை



சட்டத்தை வளைத்து காவல்துறையை பயன்படுத்தி குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது துஷ்பிரயோகம் செய்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பது சரிதானா என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மடியில் கனம் இருப்பதால்தான் இந்த வழக்கை கண்டு ஜெயல-தா அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய சட்ட வரலாற்றிலேயே இதுவரை காணாத ஆச்சரியமாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரு வழக்கு நடைபெறுகிறதென்றால் அது நமது முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்குதான்! 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு 2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டு, அதன் பிறகும் எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் விசாரித்து பின்னர் மூன்றாவதாக தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் விளக்கத்திற்கு மேல் விளக்கம், கேள்விக்கு மேல் கேள்வி, வாய்தாவுக்கு மேல் வாய்தா என்று கேட்டே நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடித்தது என்பார்களே, அதைப்போல ஜெயல-தா தரப்பு இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதிக்கே தகுதியில்லை என்று முறையிடும் அளவுக்கு சென்றுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.

சட்டத்தை வளைத்து காவல்துறையை பயன்படுத்தி குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது துஷ்பிரயோகம் செய்த ஜெயல-தா, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பது சரிதானா என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


என்னதான் இவர்கள் வழக்கை நீட்டிக்க இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டாலும் மக்களுக்கும் உலகத்திற்கும் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது எந்த அளவிற்கு வலிமையான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான ஒன்று என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எதற்காக இப்படியெல்லாம் வழக்கை இழுத்தடிக்கிறார்கள்? “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் ஏற்படும்!” இதோ ஒரு உதாரணம்!


சென்னை உயர் நீதிமன்றத்தில் எம். மாரியப்பன் என்பவர், கோவை சிறப்பு துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) உத்தரவை எதிர்த்து கோவை முதன்மை உதவி நீதிபதி நீதிமன்றத்தில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த முறையீட்டு மனு கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அதை விரைவில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கக் கோரியிருந்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவை14 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருப்பது கவலை அளிக்கும் அம்சம். நிச்சயமாக ஜீரணிக்க முடியாதது. வழக்கு தாக்கல் செய்தவரின் வழக்குக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு - 14 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு வழக்குக்கு என்றால் - 16 ஆண்டுகளாக நடைபெறும் ஜெயலலிதா தரப்பினரின் சொத்துக்குவிப்பு வழக்குக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா? பொருந்தாதா? அனைத்துச் சட்டங்களையும் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப துஷ்பிரயோகம் செய்தவர்கள் - அவர்கள்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை இவ்வாறு இழுத்தடிக்கிறார்கள். இது சரிதானா என்பதை நாட்டு மக்களே கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : EBU/PARIS Date :8/19/2012 6:32:50 PM
எல்லா சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர் ஜெயலலிதா,,,,?????சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து கொண்டு இருப்பவர்.
Name : நெல்லையப்பன் Date :8/19/2012 12:54:07 AM
மத்தவா தப்பு செய்யரச்சே எல்லா தண்டனையும் கொடுக்கலாம். ஆனா அவா தப்பு செய்யரச்சே அவாளுக்கு தண்டனை கொடுக்கக் கூடாதில்லியோ .... அவா சட்டத்துக்கு அப்பார்ப்பட்டவாங்கரத புரிஞ்சுக்கோங்கோ. எல்லாம் கலி முத்திடுத்து.