திருச்சி தீயணைப்பு துறைக்கு 400 அடி உயர ஏணியுடன் கூடிய நவீன வாகனம் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறைக்கு 400 அடி உயர ஏணியுடன் கூடிய நவீன ஸ்கைலிபட் வாகனம் வந்து உள்ளது. இதன் மூலம் உயரமான கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம். திருச்சியில் ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. அதேபோன்று நெறுக்கடியான இடங்களில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில் அதுபோன்ற இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அனைக்க ஊழியர்கள் சிரமப்பட்டனர். முன்பு தீயணைப்பு வாகனத்தின் மீது ஏறி நின்று குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைப்பார்கள். இதனால் உயரமான பகுதிக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க முடியாமல் சிரமப்பட்டது. இந்த நிலையில் தமிழக தீயணைப்பு துறை சார்பில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறைக்கு நவீன ‘ஸ்கைலிப்ட் என்ற வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கைலிப்ட் வாகனத்தில் 400 அடி உயர ஏணி உள்ளது. இதில் ஏறி நின்று ஊழியர்கள் உயரமான கட்டிடத்தின் தீயை அனைக்கலாம். மேலும் இந்த ஸ்கைலிப்ட் ஏணி 36 டிகிரில் நாலாபுறமும் சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வசதி உள்ளது. இதனால் இனி தீ விபத்தினால் அதிக பொருட்கள் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். அதே போன்று அடுக்குமாடி கட்டிடம் உயரமான கட்டிடங்களில் தீ விபத்துக்களின் போது பொதுமக்கள் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பார்கள். சிலர் உயிரை காப்பாற்ற கட்டிடத்தில் இருந்து குதித்து விடுவார்கள். இந்த ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் 400 அடி உயிர கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் எளிதில் காப்பாற்றி இறக்கி கொண்டு வந்து விடுவார்கள்.