கோஷ்டி மோதல் : போலீஸ் குவிப்பு -பதற்றம்
திருவண்ணாமலை மாவட் டம் செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்மு கம்(30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. மேலும் கிராமத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடையே அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஆடிக்கிருத்திகையொட்டி, காஞ்சி குன்றுமேட்டில் உள்ள முருகர் கோயிலில் திருவிழா நடந்தது. கோயில் அருகே நின்றிருந்த சண்முகத்திடம், ஸ்ரீதர் தகராறு செய்தாராம்.
இதையறிந்த சண்முகம், ஸ்ரீதர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப் பினரும் கைகளாலும், கம்பாலும், கல்லாலும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து சண்முகம், ஸ்ரீதரனின் ஆதரவாளர் ரங்கநாதன் ஆகியோர் கடலாடி போலீசில் தனித்த னி யாக புகார் செய்தனர். சண்முகம் கொடுத்த புகாரில் பேரில் சின்னமணி(23), பானு(19) ஆகியோரையும், ரங்கநாதன் கொடுத்த புகாரில் பேரில் சண்முகம்(30), அண்ணா மலை(25), ஜனார்த்தனன்(29), அரவிந்தன்(26), அசேன்பாய்(22), தேவன்(35), சிவா(29), ஞானபிர காசம்(29), திருநாவுக்கரசு (26),ரமேஷ்(24), வெங்கடேசன் (21), லிங்கம் (28) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விசாரணை நடத்தாமல் 12 பேரை கைது செய்ததாக கூறி சண்முகம் தரப்பைச் சேர்ந்த 200 பெண்கள் உள்பட சுமார் 350 பேர் காஞ்சி&செங்கம் சாலையில் நேற்றிரவு 7.30 மணிய ளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாசில்தார் கார்த்திகேயன், டிஎஸ்பிக்கள் கணேசன்(செங்கம்), முகமது பலுலுல்லா(போளூர்) மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர் கள் சமரசத்துக்கு உடன்பட வில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு எஸ்பி ரம்யா பாரதி மற்றும் அதிரடிப்படை போலீ சாருடன் விரைந்து வந்தார்.
மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த வக்கீல் மோகன் தலைமையில் போளூர்&செங்கம் சாலை சிங்காரவாடி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
இரு இடங்களில் நடந்த சாலைமறியலில் ஈடுபட்டவர் களிடம் எஸ்பி ரம்யாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டனர். 100க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.