கார் விபத்து : அதிமுக கிராம பஞ்சாயத்து தலைவர் பலி
அ.தி.மு.க.வை சேர்ந்த வெம்பகோட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் (52), விருதுநகரில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மகளை சேர்ப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். இவர் பயணம் செய்த கார் திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்த அவரது மகள் மற்றும் கார் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர்.