குடியரசு துணைத் தலைவரானார் ஹமீது அன்சாரி
இந்தியாவின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார். ராதாகிருஷ்ணனுக்கு பிறகு இரண்டாம் முறையாக குடியரசு துணைத் தலைவரானார் ஆனார் ஹமீது அன்சாரி.
பதிவான 736 வாக்குகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஹமீது அன்சாரி 490 வாக்குகளை பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். பதிவான வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.