பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி, ஜாமினுக்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், பெல்லாரி எம்.எல்.ஏ.,வும், கர்நாடக பால்வளத்துறை தலைவருமான சோமசேகர ரெட்டியை, ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதான ஓபுலாபுரம் சுரங்க நிறுவன வழக்கில், ஜாமின் வழங்க, சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதிக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய சோமசேகர ரெட்டியிடம் தொடர்ந்து நான்கு நாள், ஏ.சி.பி., போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்று ஐதராபாத் நாம்பள்ளியிலுள்ள ஏ.சி.பி., அலுவலகத்துக்கு சோமசேகர ரெட்டி, விசார ணைக்கு வந்திருந்தார். விசாரணை முடிந்த பின்னர், அவரை ஏ.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.