அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
தஞ்சையிலிருந்து சென்னைக்கு அம்மன் சிலைகளை கடத்த முயன்ற, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் 4 அம்மன் சிலைகளை சென்னைக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் குளத்திலிருந்து கற்சிலைகள், கடத்தி வரப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அம்மன் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.