பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள் 3 பேரை வெளி ஆட்கள் 3 பேர் தாக்கியதாகவும், பெண் பேராசிரியர்களை வெளி ஆட்கள் கேலி செய்து வருவதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.