அண்மைச் செய்திகள்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (8:50 IST)



ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது

ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சென்னையில் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. மெஷின்களை வாடகைக்கு விட்டு, தொழில் செய்கிறார். சென்னை மணப்பாக்கத்தில் வசிக்கிறார்.


இவர் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-


கடந்த 2010-ம் ஆண்டு எனக்கு சொந்தமான பொக்லைன் மெஷினை ஒரு டிரைய்லர் லாரியில் ஏற்றிச் சென்றேன். உரிய ஆவணங்கள் இல்லாமல் அதை ஏற்றிச் சென்றதாக வணிகவரி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விட்டனர். பின்னர் அதற்கு 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தார்கள். நான் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டேன்.


அபராத தொகை பாதியை செலுத்திவிட்டு, பொக்லைன் மெஷினை எடுத்துக் கொள்ளலாம் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மெஷினை எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்தது.


இந்த நிலையில், அபராத தொகையை ரூ.2 ஆயிரமாக குறைத்து உத்தரவு வழங்குவதாகவும், அதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், வணிகவரி அதிகாரி ராஜசேகர் என்பவர் பேரம் பேசுகிறார். ஆனால் அவர் கடந்த ஜுன் மாதமே ஓய்வு பெற்று விட்டார். இருந்தாலும் தொடர்ந்து பணியில் இருப்பதாக அவர் காட்டிக்கொள்கிறார். ஆயிரம் விளக்கில் உள்ள வணிகவரி அலுவலகத்துக்கு சென்று பார்த்தால், அங்கு அவர் தொடர்ந்து தனது இருக்கையில் உட்கார்ந்து இருக்கிறார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான்கிளமென்ட், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ஜீவானந்தம், விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். வணிகவரி அதிகாரி ராஜசேகரன், தான் ஓய்வு பெற்ற பிறகும் லஞ்ச வேட்டை நடத்தி வருவது தெரிய வந்தது.


நேற்று மாலை 4 மணி அளவில் மைலாப்பூர் ஆலிவர் ரோட்டில் வைத்து, முருகேசனிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்சஓழிப்பு போலீசார் ராஜசேகரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.


ராஜசேகர் சென்னையை அடுத்த அன்னனூரில் குடும்பத்தோடு வசிக்கிறார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :