மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
மராட்டிய அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ கட்டிடம் கடந்த ஜூன் மாதம் 21–ந் தேதி தீ பிடித்தது.
இந்த தீ விபத்தில் முதல்–மந்திரி அலுவலகம் உள்பட 4, 5, 6–வது மாடிகள் எரிந்து நாசம் அடைந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மந்திராலயா’ கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து மராட்டிய மந்திரி சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.