பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் புறநகரில் உள்ள எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிந்து வந்தவன் மாணவன் சங்கர். சங்கரன்கோவில் கோமதி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வருவான்.
வழக்கம்போல இன்று (02.08.2012) மாலை பள்ளி முடிந்து சுமார் 4.30 மணி வாக்கில் பஸ் ஏறுவதற்காக சாலையை கடந்திருக்கிறான். அப்போது ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வே- நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மாணவன் மீது மோதியது.
இதில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்த மாணவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பள்ளியின் மாணவர்கள், அந்த பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, மாணவனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.