திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையான மருத்து படிப்பு படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக, ஆட்சியர் விஜய்பிங்ளேவுக்கு புகார் வந்தன. இதையடுத்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ராமலிங்கம், போலி மருத்துவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.பட்டியலின்படி நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., ரம்யாபாரதியை ஆட்சியர் கேட்டு கொண்டார். போலீசார், வருவாய்த் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, வேட்டவலம், ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி யில் முறையான மருத்துவ படிப்ப படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த, 28 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகள், பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டு குறித்து தகவலறிந்த போலி மருத்துவர்கள் பலர் கிளினிக்கை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் 10ம் வருப்பு மற்றும் பிளஸ் 2 மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை பகுதியில் ஒரு போலி மருத்துவர் கூட கைது செய்யப்படவில்லை.
இப்பகுதியில் உள்ள ஏராளமான போலி மருத்துவர்களுக்கு ரெய்டு குறித்த தகவல் முன் கூட்டி யே அவர்களுக்கு வேண்டப்பட்ட போலீசார் மூலம் ரகசிய தகவல் கிடைத்ததால், பலர் கிளினிக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்ட தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை நகரில் உள்ள போலி மருத்துவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.