விலையேற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார்: பாரதீய ஜனதா கண்டனம்
இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த நான்கு வருடங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வானத்து ராக்கேட்டைப்போல் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று விளக்கமளிக்க வேண்டும்.
மக்கள் நாட்டின் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் அந்த காயத்திற்கு உப்பிடுவதுபோல் மத்திய அரசு செயல்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட இந்த நிலையை ஒருபோதும் நான் எதிர்பார்க்க வில்லை. இந்தியாவில் போதுமான மழை இன்றி பஞ்சத்தை போன்று மோசமான நிலையை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். இந்த கடுமையான விலையேற்றத்தை தொடர்ந்து எதிர்த்து வருவோம். கடுமையான இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.