பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை நோக்கி கல்வீச்சு: ஹசாரே குழு மறுப்பு
டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் வீட்டு முன்பு இன்று (28.07.2012) சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் என கூறப்பட்டது.
அவர்களில் சிலர் மன்மோகன்சிங் வீட்டை நோக்கி கல்வீசி தாக்கியதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த போராட்டம் தங்கள் அமைப்பு சார்பில் நடத்தப்படவில்லை என்று, அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் செய்தி தொடர்பாளர் அஸ்வதி முரளிதரன் தெரிவித்து இருக்கிறார்.