அண்மைச் செய்திகள்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி ||
தமிழகம்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
......................................
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
......................................
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :பரபரப்பு தீர்ப்பு
......................................
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
......................................
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
......................................
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
......................................
சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
......................................
எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் )
......................................
ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
வெங்கடேஷ் பிரபுவுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சிட்கோ தலைவர் பிரபாகருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் திருட்டு
......................................
மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்
......................................
அதிமுக சேர்மன் கணவர் மீது மோசடி புகார்
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் அப்துல் ரஹீம் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் சண்முகநாதன் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா பேனரை போலிசார் அகற்றியதால் பரபரப்பு
......................................
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: கடத்தல்காரர்களை கைது செய்யுமா போலிஸ் (படம்)
......................................
டி.ராஜாவுக்கு சீட் விட்டுக்கொடுத்த அதிமுக பிரமுகருக்கு பதவி வழங்கிய ஜெயலலிதா
......................................
தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கு​ம் தமிழக அரசைக் கண்டித்து தமிழகமெங்கு​ம் ஆர்ப்பாட்ட​ங்கள்! (படங்கள
......................................
நெல்லை எம்.பி., முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோதல் (படங்கள்)
......................................
மலையை முட்டும் மேகங்கள் - (குற்றாலத்துக்கு அழைக்கும் படங்கள்)
......................................
பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவிகளுக்கு வரவேற்பு (படங்கள்)
......................................
போலீஸ் போல நடித்து ரூ.50 ஆயிரம் பறிமுதல்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
வக்கீல் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தள்ளுபடி!
......................................
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது! (படங்கள்)
......................................
விஞ்சுக்கு அலைமோதும் முருக பக்தர்கள்! (படங்கள்)
......................................
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு
......................................
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (17:51 IST)



ஆகஸ்ட் 12ல் புதிய அமைப்பு!
 கொளத்தூர் மணி அறிவிப்பு!



பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை.க.இராசேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் கருத்துவேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச்செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம்.

பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் - எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்துநின்று செயல்படுவது என்பதையும் கூறினோம்.

இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட விரும்பாமல் மீண்டும் திறந்த மனத்துடனேயே ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனாலும் இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே தோழர் இராமக்கிருட்டிணனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதிலும், ஒன்றுபடுதல் நிகழ்ந்து விடவேகூடாது என்று தடுத்து நிறுத்துமளவுக்கு தனிநபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளைத் தோழர்களிடம் பரப்புவதிலும் ஈடுபட்டனர். 

இணைந்து செயல்பட முடியாமல் பிரிந்துபோகும் நிலையிலும், ஏனைய கட்சிகளில் - அமைப்புகளில் நடப்பதைப் போல் “இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார்” என்பது போன்ற இழிநிலைகள் பெரியார் இயக்கத்தில் நாம் வழிநடத்திய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற உண்மையான கவலையோடு அவற்றை எல்லாம் தவிர்த்துவிடவே விரும்பினோம்.

எனவே, பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும், கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரீகமாகப் பிரிந்துவிடலாம் என்று கருதியதால் - பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாகக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன்வைத்துள்ளோம்.

பெரியார் இயக்கத்தின் மதிப்பு - மாண்பைக் காக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களும் இதனை ஏற்றுச்செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்; செயல்படவேண்டும்.

அதேவேளையில், நாமும் அமைப்புக்கு புதிய பெயர் வைத்துக்கொண்டு, கொள்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கருதினோம். தோழர்களிடம் இதைக் கூறினோம். நமது தோழர்களும் இத்தகைய பண்பான அணுகுமுறைதான் நமக்குச் சரியானது என்று ஆதரவு தெரிவித்தனர்.


இந்த நிலையில், இதுகுறித்து நாம் இறுதி முடிவெடுக்கவும், மேலும் நமது தோழர்களுடன் கலந்து பேசவும் எதிர்வரும் 12.08.2012 ஞாயிறன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாட்டை ஏற்கக்கூடிய நமது தோழர்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைக்கூற உரிமையுடன் அழைக்கிறோம்.

பெரியார் வலியுறுத்திய ஜாதி ஒழிப்புக் கொள்கையை, பார்ப்பன - ஜாதி ஆதிக்க சக்திகள் சவால்விட்டு எதிர்க்கின்றன. பெரியார் கொள்கைகளுக்கு எதிரிகள் - திரிபுவாதிகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழலில் நாம் பெரியார் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு கோஷ்டி பூசல்களில் - தனி மனித விமர்சனங்களில் ஆட்படுவது பெரியார் கொள்கைக்கு இழைக்கும் துரோகம் ஆகிவிடும். அது நிகழக்கூடாது என்பதே நமது கவலை.

தன்னை முன்னிலைப்படுத்தாது - சுயவிளம்பரங்களைப் புறந்தள்ளி - கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி - தன்னல மறுப்புடன் கொள்கைப் பணியாற்ற முன்வந்துள்ள நம்மால் பெரியாரியலுக்கு மேலும் வலுசேர்க்கமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Murugavel. Muthukumaran Country : Australia Date :7/29/2012 11:53:57 AM
கடந்த காலங்களில், குறிப்பாக ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் , தமிழகத்தில் மிகத்தீவிரமாக ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடிய இயக்கம் பெ.தி.க. இந்த இயக்கம் ஒரு பெரிய இயக்கமாக இருந்திருந்தால் தமிழகத்தில் ஈழப்போராட்டம் இன்னும் வலு பட்டிருக்குமே என்றெல்லாம் யோசித்து வருத்தப்பட்டது உண்டு. பெ. தி.க விற்குள் பிளவு என்ற செய்தியை அரசல் புரசலாக கேள்விப்பட்டபோது இந்த செய்தி வெறும் வதந்தியாக இருந்துவிட வேண்டும் என்றெல்லாம் விரும்பியிருக்கிறேன். கடைசியில் இயக்கத்தின் பிளவு உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சிறிய இயக்கமாக இருக்கும் ஒரு இயக்கம் மேலும் பிரிவது துர்ரதிஷடவசமானது. இரு பிரிவினரும் தங்கள் இறுதி முடிவை அறிவிக்கும் முன்னர் யாராவது, இயக்கத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்குள் நிலையான ஒற்றுமையை ஏற்படுத்தினால் தமிழகத்திற்கு பெரிய உதவியை செய்தவர்களாவார்கள்.
Name : Nakkeeran Country : Canada Date :7/29/2012 2:03:50 AM
பெரியார் பட்டம் பதவிக்கு ஆசைப்படாது மக்களுக்கு தொண்டு ஆற்றியவர். அவரது பெயரில் கழகம் வைத்திருப்பவர்கள் பிரிந்து நிற்பது விரும்பத் தகுந்த செயல் அல்ல. ஏற்கனவே தி.க வில் இருந்து பிரிந்த அமைப்புத்தான் பெதிக.
Name : TruthAlonePrevails Country : Singapore Date :7/28/2012 8:36:32 PM
பெரியார் எனப்படுபவர் தமிழரா?