எனக்கு வேறு ஒன்றும் தெரியாது: சச்சின் பேட்டி


இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக மாஸ்டர் பேட்ஸ்மேனும் , ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும், என் ரத்தம், மூச்சு என கிரிக்கெட் நீக்கமற நிறைந்துள்ளது. கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக, கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ கார் ஓட்டியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக அவர் கூறினார்.