ஜீப் விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு
நேபாளத்தில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில், 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். பால்பா மாவட்டத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த, ஜீப் சாலையிலிருந்து விலகி சென்று, தடுமாறி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் மேற்கொண்ட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். கடும் மழை காரணமாக இந்தியர்கள், சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீப் கவிழ்ந்த இடத்தில் நேபாள பொதுமக்கள், மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.