பாகிஸ்தானுக்கு அளித்துவந்த நிதியைநிறுத்தியது அமெரிக்கா
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிதியுதவியை வாரி வழங்கி வருகிறது. பாகிஸ்தான் இதனை ராணுவ செயல்பாட்டுக்காக பெருமளவில் பயன்படுத்தி வருகிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவோடு துணை நிற்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க சந்தேகிப்பதால் சமீப காலங்களில் இந்த நிதியுதவியை குறைக்க வேண்டுமென்று அந்நாட்டு எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்தது அம்பலமானதை அடுத்து இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி 650 மில்லியன் டாலர் குறைப்பதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நிறைவேறியுள்ளது.
குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. டெட் போ என்பவர் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.
முதலில் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவியை குறைக்க வேண்டும் எனும் தீர்மானத்தை அவர் கொண்டு வர விரும்பினார்.
எனினும் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற வழிசெய்யும் வகையில் 650 மில்லியன் டாலராக குறைத்தார்.இந்த தீர்மானம் அடுத்ததாக செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.