சிறையில் இருந்து வந்து ஜெகன்மோகன் ஓட்டுப்போட்டார்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதற்கு ஜெகன்மோகன்ரெட்டிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது.
நேற்று அவர் ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை வளா கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
அவரை எதிர்பார்த்து அவரது தாயாரும், புலிவேந்துலா எம்.எல்.ஏ.வுமான ஒய்.எஸ். விஜயாம்மா காத்திருந்தார். இருவரும் ஒன்றாக ஓட்டுப்பதிவு செய்தனர்.
இதேபோன்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதர வாளரும், சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை யில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மந்திரியுமான மோபிகாதேவி வெங்கட ரமணாவும் போலீஸ் பாதுகாப் புடன் அழைத்து வரப்பட்டு ஓட்டுப்பதிவு செய்தார்.
ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.