திட்டக்குடி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவுக்கு முன் ஜாமீன்
போலீஸ் நிலையத்தில் இருந்து, மகனை மீட்டு சென்ற வழக்கில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழகனுக்கு, சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கியது. திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ., தமிழகன். தே.மு.தி.க., வைச் சேர்ந்தவர். ஒரு வழக்கில், இவரது மகனை விசாரிப்பதற்காக, பென்னாடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது மகனை, தமிழகன் மீட்டுச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பென்னாடம் போலீசார், தமிழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கில், முன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் தமிழகன் மனுத் தாக்கல் செய்தார். மனு வை, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். எம்.எல். ஏ.,வான தமிழகனுக்கு, முன்ஜாமின் வழங்கி, நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டார்.