பஸ் ஆற்றில் கவிழந்ததில் 36 பக்தர்கள் பலி
நேபாள் நாட்டின் தென்கிழக்கே தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள நாவேல்பராசி மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோயிலுக்கு யாத்திரையாக இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் உள்பட பலர் பேருந்து ஒன்றில் சென்றனர்.
இந்த பேருந்து காத்மாண்டு நகர் அருகே ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 35 பேர் பலியாயினர். இவர்களில் பெரும் பாலானோர் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரை பெண்கள், குழுந்தைகள் என 20-க்கும் மேற் பட்ட உடலகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.