பெண்கள் செல்போனில் பேச தடை :சரத்யாதவ் கண்டனம்
உத்தரபிரதேச கிராமம் ஒன்றில், காதல் திருமணம் செய்யக்கூடாது, பெண்கள் வெளியே சென்றால் முக்காடு போட்டு உடலை மறைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும், அவர்கள் செல்போனில் பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை பஞ்சாயத்து விதித்து உள்ளது.
இதற்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘திக்தாத் என்ற பெயரில் சட்ட விரோதமான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதன் மூலமாக, இந்த நாட்டின் சட்டத்தை வெளிப்படையாகவே மீறி உள்ளனர் என்றும், இந்த மாதிரியான பஞ்சாயத்து உத்தரவுகள் நமது சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துபவை’’ என்றும் தெரிவித்தார்.