பெருந்தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றைய தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் 110-வது பிறந்த தின விழா ஜூலை 15-ந் தேதி தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம், சீருடை, இலவச கல்வி, தமிழகமெங்கும் தொழிற்பேட்டைகள், பாய்கிற நீரைத் தடுத்து அணைகள் கட்டி விவசாயத்திற்கு பயன்பட செய்தவர், தமிழில் முதலில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழை ஆட்சி மொழியாக்கியவர்.
இப்படிப்பட்ட சாதனைகளை செய்த கல்விக் கண் கொடுத்த காமராஜர் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக தமிழகமெங்கும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஜூலை 15 அன்று சத்தியமூர்த்தி பவனில் பெருந் தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடை பெறும். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கள் மற்றும் கட்சி முன்னணியினர் கலந்து கொள்வார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் வழிநடக்க இப்பிறந்தநாள் விழாவில் சபதம் ஏற்போம். ஜூலை 28-ந் தேதியன்று மாலை 5 மணிக்கு பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மதுரை மாநகர், மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறவிருக்கிறது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.