ரஜினி சிங்கப்பூரில் இருந்து குணமடைந்து திரும்பிய நாள்: ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு
நடிகர் ரஜினி, கடந்த வருடம் ஏப்ரல் 29-ந்தேதி வடபழனியில் நடந்த ‘ராணா’ பட பூஜையில் ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பலனில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக மே 27-ந்தேதி சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரஜினி குணமடைய கோவில்களில் வழிபட்டனர். பொதுமக்களும் பிரார்த்தனை செய்தார்கள்.
இதையடுத்து அவர் பூரண குணம் அடைந்து கடந்த வருடம் ஜூலை 13-ந்தேதி சென்னை திரும்பினார். ரஜினி குணமடைந்த தினமான இன்று ரஜினி ரசிகர்கள் கோவில்களில் நேர்த்தி கடன்கள் செலுத்தினார்கள்.
சென்னை ரசிகர்கள் நேற்று வேன்களில் வேளாங்கன்னிக்கு புறப்பட்டுச் சென்றார்கள். இன்று காலை கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாகூர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்கள். ரஜினி குணமடைய மொட்டை போட்ட ரசிகை கவுரி மயி லாப்பூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார் தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சுந்தர் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.