விழுப்புரம்: பொன்முடி உள்பட ஆயிரம் பேர் கைது
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி இன்று விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.