"இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்' -தமிழக போலீஸ் உயரதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று அவர்கள் சொல்வது, கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியைத்தான்.
""1986-ல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாகப் பணிக்கு வந்தவர் துக்கையாண்டி. 2012 ஜூன் 30-ந் தேதி, அவருடைய ரிடையர் மெண்ட் நாள். டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கிறவங்களுக்கு, கன்மேன் அணிவகுப்போடு ரிடையர்மெண்ட் கொடுப்பாங்க. அதுதான் சர்வீசுக்கு கிடைக்கிற கௌரவம். அந்த கௌரவம் பெறக்கூடிய முழுத் தகுதியும் உள்ளவர்தான் துக்கையாண்டி. ஆனா, அந்த கௌ ரவம் கிடைக்கக்கூடாதுங்கிறதுக்காக, இப்படியா ரிடையர் மெண்ட்டுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்க?'' என அதிர்ச்சி விலகாமல் பேசிக்கொள்கிறார்கள், இந்த ஆட்சியில் பவர்ஃபுல்லான போஸ்டிங்கில் இருக்கும் காக்கி அதிகாரிகள். துக்கையாண்டி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் உறைந்து போயிருக்கும் உயரதிகாரிகள் பலரும், இந்த அரசாங்கம் செய்த பெரிய தவறு இது என்று சொல்வது ஆச்சரியமான உண்மை.
"ரிடையர்மெண்ட்டுக்கு முன்னாடி அவரை சஸ்பெண்ட் பண்ணியாகணும். என்ன செய்வீங்களோ தெரியாது' என ஜெ.வின் நேரடி உத்தரவையடுத்துதான் இந்த நடவடிக்கை என்கிறது கோட்டை வட்டாரம். ஒரு போலீஸ் உயரதிகாரி மீது ஆட்சிக்குத் தலைமை வகிப்பவருக்கு ஏன் இத்தனை கோபம்?
1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், ஜெ. மீது கலர் டி.வி. ஊழல் வழக்குப் பதிவாகிறது. உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான அவசரம் எதுவும் காட்டப்பட வில்லை. தி.மு.க.வின் கூட்டணியிலிருந்த த.மா.கா. தலைவர் மூப்பனார், கலைஞரை சந்தித்து, ஜெ. ஆட்சியின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப் போம் என்று சொல்லித்தானே மக்களிடம் ஓட்டு வாங்கினோம். கைது செய்ய ஏன் தாமதம்?' என்று கேட்குமளவுக்கு இந்த வழக்கு பரபரப்பாக இருந்தது.அப்போது, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த துக்கையாண்டிதான் இந்த வழக்கைக் கவனித்தவர். "குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் போடுவார்கள். அதில் கோர்ட் என்ன உத்தரவிடுகிறது என்பதைப் பார்த்து....