அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
தமிழகம்
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஜூலை 2012 (9:24 IST)



காதலி கழுத்தை அறுத்து படுகொலை! காதலன் தற்கொலை முயற்சி!


சென்னை முகப்பேரில் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, காதலன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் ரோட்டில் வேவ்ஸ் துணிக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியர்களாக முருகானந்தம் (வயது 24), பவானி (20) ஆகிய இருவர் வேலை பார்த்தனர். இருவரும் பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள். முருகானந்தம் பாடிக்குப்பம் காமராஜர்நகரைச் சேர்ந்தவர். பவானி காந்தி நகரைச் சேர்ந்தவர்.


கடந்த 2 ஆண்டுகளாக இந்த கடையில் இருவரும் ஒன்றாக வேலை பார்த்ததால், நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.


நேற்று மாலை 4.30 மணி அளவில் கடையில் பவானியும், முருகானந்தமும் தனியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.


எதிர்பாராத வகையில் திடீரென்று முருகானந்தம், பவானியை தாக்க தொடங்கினார். முதலில் அவரை கீழே தள்ளினார். பின்னர் அவர் மீது ஏறி உட்கார்ந்து, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஆக்ரோஷமாக சத்தம் போட்டார். பின்னர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து பவானியின் கழுத்தை முருகானந்தம் அறுத்ததாக தெரிகிறது. பவானி மரண ஓலத்தில், என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினார். பின்னர் முருகானந்தம் தன்னைத்தானே அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.


பவானியின் கழுத்து முழுவதும் அறுந்து தொங்கியது. முருகானந்தம் கழுத்து சரியாக அறுபட வில்லை. அவரும் காயம் அடைந்தார். காதல் ஜோடியினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கடையின் சக ஊழியர் வெங்கடேசன் நினைத்துக் கொண்டு சற்று தூரத்தில் ஒதுங்கி நின்றார். ஆனால் சத்தம் கேட்டு அவர் ஓடி வருவதற்குள் இருவரும் கழுத்து அறுபட்டு விட்டனர்.


வெங்கடேசன் இருவரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பவானி பரிதாபமாக இறந்து போனார். முருகானந்தம் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன், இணை கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா, உதவி கமிஷனர் கலியதீர்த்தான், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.


கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, முருகானந்தத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். முருகானந்தம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:

எனது தந்தை பெயர் பொன்னுசாமி. பவானியின் தந்தை குமார். தாயார் லலிதா. பவானிக்கு அக்கா ஒருவரும், தம்பியும் உள்ளனர். எனக்கு ஒரு காலில் லேசான ஊனம் உள்ளது. எனது ஊனத்தை பற்றி கவலைப்படாமல் பவானி என்னை காதலித்தாள். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தோம்.


இந்த நிலையில் பவானி என்னை விட்டு விலகிச்செல்ல ஆரம்பித்தாள். கடைக்கு வேலைக்கு வந்தால், என்னை பார்க்க நேரிடும் என்பதால், வேலையை விட்டும் நின்று விட்டாள். நான் அவளை பார்க்க முடியாமல் கடந்த 15 நாட்களாக துடித்து போய் விட்டேன். இந்த நிலையில் பவானி என்னை தூக்கி எறிந்து விட்டு, வேறொரு வாலிபருடன் பழகுவதாக அறிந்தேன்.


இதற்கிடையில் கடைக்கு ஆள்தேவை என்று பவானியை வேலைக்கு வா என்று கடை முதலாளி வற்புறுத்தினார். இதை ஏற்று பவானி மீண்டும் வேலைக்கு வந்தாள். மாலையில் கடையில் கூட்டம் குறைவாக இருந்தபோது, அவளிடம் போய் நியாயம் கேட்டேன். என்னை ஏன் காதலித்தாய். இப்போது ஏன் மோசம் செய்தாய் என்று கேட்டேன். ஆனால் அவள் என்னை நொண்டி என்று ஏளனமாக பேசியதோடு, என்னை மறந்து விடு. நீ எனக்கு ஏற்ற ஆள் இல்லை என்று கேவலமாக பேசினாள்.

எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று, கத்தியால் கழுத்தை அறுத்து விட்டேன். அவள்போன பிறகு எனக்கும் வாழ்க்கை தேவை இல்லை என்று கருதி எனது கழுத்தையும் அறுத்துக்கொண்டேன். ஆனால் நான் பிழைத்தது எனக்கு பிடிக்கவில்லை.


இவ்வாறு முருகானந்தம் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த காதல் படுகொலை சம்பவம் முகப்பேர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : LAX Country : Australia Date :7/5/2012 5:13:37 PM
"எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று, கத்தியால் கழுத்தை அறுத்து விட்டேன். அவள்போன பிறகு எனக்கும் வாழ்க்கை தேவை இல்லை என்று கருதி எனது கழுத்தையும் அறுத்துக்கொண்டேன். ஆனால் நான் பிழைத்தது எனக்கு பிடிக்கவில்லை." அடுத்தவங்க கழுத்தை அறுக்கும்போது இருந்த வேகம் ஏன் உன் கழுத்தை அறுத்துக் கொள்ளும்போது இல்லை?
Name : Ravi-Swiss Date :7/5/2012 1:45:27 AM
மிகவும் சோகமான சம்பவம்' இளசுகளின் இரத்தம் அடங்காது' காதலிக்க முதல் அப்பெண்ணுக்கு முருகா நொண்டி என்று புரியவில்லையா''? வேறோர் ஆண் கிடைத்தவுடன் இவரை கைவிட்டால்'? நொண்டி என்று ஏளனம் பண்ணிய அப்பெண்ணின் தலை இப்போ''?