நித்தியானந்தா ஆசிரமத்தின் நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளது! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
அமெரிக்காவில் உள்ள நித்தியின் 17 தியான பீடங்கள் லாபநோக்கோடு செயல்படவில்லை எனக் கூறி ஏராளமான நிதி வசூலித்தன. இந்தப் பணத்தில் லாபநோக்கத்துடனும் சொந்த விருப்பங்களுக்காக ஆடம்பரமாக செலவு செய்ததையும் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு பலமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 12 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், நித்தியானந்தா ஆசிரமத்தின் நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் விபரம் எதிர்பார்க்கப்படுகிறது.