பிரணாப் முகர்ஜிக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஜனாதிபதி தேர்தலில் ஆதாயம் பெற முயன்றதாக, குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் வி.கே.ஜெயின், பிரதிபா ராணி ஆகியோரை கொண்ட டெல்லி ஐகோர்ட்டு பெஞ்ச் இந்த மனு மீது விசாரணை நடத்தி தள்ளுபடி செய்தது.