ஈழத்துக்கு தமிழகம் குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? சிங்கள அமைச்சரின் திமிர் பேச்சு
தமிழீழத்துக்காக இந்தியா குரல்கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும் என்று அந்நாட்டின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பிரிவினைவாத சக்திகளின் பேச்சைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்கக் கூடாது. இதை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என சம்பிக்க குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை கூறியும் கேட்க மறுக்கின்றனர். எனினும் கருணாநிதி, சீமான், வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இனி இலங்கையில் நிறைவேறாது என அவர் தெரிவித்தார்.
பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது குறித்து சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், ௭னக்கு ௭திராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் ௭திர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை வைகோ, சீமான் மற்றும் கலைஞர் போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.