மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறேன்: கலெக்டரிடம் மாணவன் மனு
புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் முடிந்து மக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடந்தது. இதில் நலத்திட்டங்கள் கேட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.
இதே போல 25.06.2012 மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வந்திருந்த பல மாணவர்கள் தங்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும். பஸ் பாஸ் கிடைக்காமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் நடந்தே செல்கிறோம் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.கோட்டைப்பட்டிணத்திலிருந்து வந்திருந்த மணி என்ற மாணவன் தனக்கு அரசு கொடுத்த மூன்று சக்கர சைக்கிள் ஓட்ட தகுதியின்றி உள்ளது. அதை மாற்றி கொடுங்கள் என்று பல முறை கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் நான் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று அந்த மாணவன் கூறினான்.