சுசில்குமார் ஷிண்டே விசாரணை கமிஷன் முன் ஆஜர்
`கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் வாரிசுகளுக்காக மும்பை கொலபாவில் 31 மாடிகளை கொண்ட `ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், குடியிருப்பின் வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் மராட்டிய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.ஏ. பாட்டீல் தலைமையிலான இருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மத்திய மின்சார துறை மந்திரியும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான சுசில் குமார் ஷிண்டேயை நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் நோட்டீசு அனுப்பியது.அதன்படி மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே இன்று விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.