என்மீது வைத்துள்ள அன்பைக் குறித்து பிரணாப் பேசினார்: ஆனால், ஆதரவு கேட்கவில்லை: அத்வானி

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது இணைய தள தகவல் பக்கத்தில், பிரணாப் முகர்ஜி எனக்கு போன் செய்தவுடனே ஜனாதிபதி வேட்பாளராகத் தோந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கவில்லை என்ற தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று பிரதமர் மன்மோகன் சிங் போன் செய்தார். சிறிது நேரத்திலேயே இன்னொரு போன்கால் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவித்தது.
பிரணாப் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கூறினார். ஆனால், தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கவில்லை. 1970 ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் என்னுடன் பணியாற்றியது குறித்தும் அப்போது நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தும் என்மீது அவர் வைத்துள்ள அன்பைக் குறித்தும் பிரணாப் முகர்ஜி பேசினார் என்றும் அத்வானி அந்தத் தகவல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.