பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இழந்துள்ளது: மன்மோகன் சிங்
குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜியை வழியனுப்புவதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரணாபை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் வாழ்த்தி இனிப்புகளை வழங்கினர். பின்னர் காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கு பிரணாப் நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மந்திரிசபையில் இருந்து பிரணாப் முகர்ஜி விலகுவதால், மத்திய அரசின் பல பணிகள் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறினார்.