அண்மைச் செய்திகள்
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) || அழிந்து வரும் பனைமரங்கள்! || முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை ||
இலங்கை
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (15:47 IST)



யுனெஸ்கோ ஆலோசகர் அசன் முகமது ஜின்னாவின் தமிழீழ ஆதரவுக் கடிதத்தை இழிவுபடுத்தும் இலங்கைப் பிரதிநிதி!


  ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். போருக்குப் பிறகு அங்குள்ள தமிழர்களின் அவல நிலையையும், எடுக்கப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார்.




இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்வதாகவும், போருக்குப்பிறகு ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் நல்வாழ்வு பெற்றுள்ளதாகவும், தமிழர் பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் நடக்கவில்லை என்பதுபோலவும் தனது பதில் கடிதத்தில், திலுப் நானயக்காரா எழுதியிக்கிறார். அத்துடன், மகிந்த சிந்தனை என்ற பெயரில் ராஜபக்சே அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் அதன்பின்னர் முள்வேலி முகாம்களும் இலங்கையில் தமிழினத்தை அழித்த நிலையில், இலை சோற்றில் பூசணிக்காயை மறைக்க நினைக்கும் திலுப் நானயக்காரா, தன் கடிதத்தில் அசன் முகமது ஜின்னாவையும் அவரது நோக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில்,  யுனெஸ்கோவின் ஆலோசகராக இருந்துகொண்டு,  தனித் தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கோருவது நகைப்புக்குரியது, வெட்ககரமானது என்றும் எழுதி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அவமானப்படுததியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sivanandam arasan Date :6/26/2012 9:47:23 PM
வன்மையான கண்டனத்திற்குரியது!
Name : nageswaran Country : Malaysia Date :6/26/2012 3:58:08 PM
உலகத்தில் தனித்தமிழ் நாடு உருவாகினால்தான் தமீழம் பிறக்கும்.இந்தியாவை நம்பியது போதும்.
Name : அபுல் கலாம் Date :6/26/2012 2:20:19 PM
வன்மையான கண்டனத்திற்குரியது!
Name : Ravi-Swiss Date :6/25/2012 6:01:10 PM
ஓர் இன மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கும் ஓர் நல் உள்ளத்தை' நகைப்பு வெட்ககரமானது' என்று அவமானப்படுத்துவது என்பது எவளவு கேவலமானது' ஆனால்' இதனை சிங்கள இனம் செய்யும்' அப்போ முள்ளிவாய்க்கால் கிராமத்தில்''?