பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு திக்விஜய் சிங் வேண்டுகோள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவில்லை. விரைவில் மம்தா பானர்ஜி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் வேண்டுகோள் விடுத்தார்.
யாரையும் வேட்பாளராக தேர்வுசெய்யாத நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மமதா பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று திக்விஜய் கேட்டுக் கொண்டார்.