22-ல் கண்டன பொதுக்கூட்டம் :கலைஞர் பேசுகிறார்
தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ’’அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் புரசைவாக்கம் தாணா தெருவில் 22-ந் தேதி மாலை 6 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு, பகுதிச்செயலாளர் கோ.ஏகப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார். வட்டச்செயலாளர்கள் ராஜேந்திரன், வேணுகோபால் நன்றியுரை ஆற்று கின்றனர். முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.