யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு! விஜயகாந்த் அறிவிப்பு!
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தீராத பிரச்சனைகள் பல்லாண்டுகளாக இருந்தும், அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் குடியரசுத் தலைவராக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்துகொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு செய்கின்ற நன்மை. தேமுதிக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானித்திருப்பதாக விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.