நாமக்கல் அருகே ரவுடி வெட்டி கொலை
நாமக்கல் அருகே பிரபல ரவுடி மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், வளசைமோகன். பிரபல ரவுடிகளான இவர்களுக்குள்ளே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பகை இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வளசைமோகனின் முக்கிய ஆதரவாளரான மீனாட்சி சுந்தரம் மர்ம கும்பலால் வெட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.