வீரபாண்டி ஆறுமுகத்துக்கு காவல் நீடிப்பு! போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!
சேலம் அங்கம்மாள் காலணி குடிசைகள் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் இன்று (16.06.2012) மதியம் 12.40 மணிக்கு சேலம் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வீரபாண்டி ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உடல்நிலை சரியில்லாதவ 74 வயதுடைய வீரபாண்டி ஆறுமுகத்தால் காவல்நிலையத்தில் இருக்க இயலாது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. போலீசார் திட்டமிட்டு போடப்பட்டுள்ள பொய் வழக்கு. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதியம் தீர்ப்பளிக்கடும் என்று கூறினார்.
மதியம் 2.40 மணிக்கு நீதிபதி, வீரபாண்டி ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று போலீசார் போட்டியிருந்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தை வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் வேலூர் சிறைக்கு கொண்டுச் சென்றனர்.