நித்திக்கு ஜாமீன்! கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப்!
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா, ஜாமினில் வெளியே வந்ததும், மீண்டும் பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த வழக்கில் கைது செய்த கர்நாடக போலீசார், அவரை மைசூர் சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் நித்தியின் ஜாமின் மனு இன்று (15.06.2012) ராம்நகர் மாவட்ட கலெக்டர் (மாஜிஸ்திரேட்) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமினுக்கான நகல் இரவு 8.45 மணிக்கு மைசூர் சிறையில் கொடுக்கப்பட்டது. 9 மணிக்கு சிறையில் இருந்து வெளியேறிய நித்தி, செய்தியாளர்களை சந்திக்காமல் இன்னோவா காரில் கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப் ஆனார்.
இரவு 12 மணி அளவில் மதுரை வந்து சேரும் நித்தி, மதுரை ஆதின மடத்தில் தொடர்ந்து தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.