Skip to main content

ஐபிஎல் ஏலம் எப்போது? - பிசிசிஐ அதிகாரி தகவல்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

ipl

 

2008 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து, விரைவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள், தங்கள் அணிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களை விடுவித்துள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் ஏலம் நடைபெறும் தேதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வாரிய அதிகாரி, ஏலம் எங்கு எப்போது நடைபெறும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரை, இந்தியாவிலேயே நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.