Skip to main content

அழித்துவிட்டு அருமையை உணர்ந்த சீனா! - சிட்டுக்குருவியின் கதை  

Published on 20/03/2018 | Edited on 21/03/2018

மார்ச் 20 – உலக சிட்டுக்குருவிகள் தினம்

வீட்டுக்குருவி, ஊர்க்குருவி என அழைக்கப்பட்ட சிட்டுக்குருவி இன்று அரிய வகை குருவியாக மறுவி வருகிறது. உலகளவில் பல நாடுகளில் வாழ்ந்த சிட்டுக்குருவி இனம் இன்று அரிய வகை பறவையினமாகி வருகிறது என பறவையியல் அறிஞர்கள் கவலையோடு உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

 

sparrow



சிட்டுக்குருவிகள் காடுகளில் பெரும்பாலும் வாழாது. மனிதர்களோடு மனிதராகத்தான் வாழும். மனிதனின் வாழ்க்கை இயல்பை போல அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளும். அதன் ஆயுள்காலம் 13 ஆண்டு காலமாகும். வைக்கோலால் தான் அது தனது வீட்டை கட்டும். சூரிய உதயத்துக்கு முன்பே தனது கீச் குரல்களால் வீட்டில் உள்ளவர்களை எழுப்பும். அதே போல் சூரியன் மேற்கே மறையும்போது தன் கூட்டுக்கு சிட்டுக்குருவி வந்துவிடும். இந்தியாவில் டெல்லி அரசின் மாநில பறவையிது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் ஒரு அங்கத்தினராய் சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும். கீச், கீச் என்கிற அதன் சத்தமே  இனிமையானது. அந்த சத்தத்தை இன்றைய தலைமுறை கேட்காமலே வளர்கிறது. அதுமட்டுமல்ல விவசாயிகளின் நண்பனாகவும் இருந்தது சிட்டுக்குருவி. வயல்வெளிகளில் பயிர்களில் உள்ள பூச்சிகளே அதன் உணவுகளாக இருந்தன. அந்த சிட்டுக்குருவி இனம் தற்போது உலகளவில் குறைந்துவிட்டது.

அந்த இனம் அழிவதற்குக் காரணம், ஜன்னல் வைக்காத வீடுகள், கான்கிரீட் கட்டிடங்கள், நிலங்களில் ரசாயனம் தெளிப்பது, டெக்னாலஜி வளர்ச்சி போன்றவை. இதனால் வெகுவாக அழிந்துவிட்ட அந்த இனத்தை காக்க வேண்டும் என பறவையியல் அறிஞர்கள் ஒன்று கூடி சிட்டுக்குருவிகளுக்காக ஒரு தினத்தை உருவாக்க வேண்டுமென விவாதித்தார்கள்.

உலக அளவில் பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலரான முகமது திலாவர் என்பவர் தான் சிட்டுக்குருவி இனத்தை காக்க விழிப்புணர்வு பணியில் குதித்ததோடு, சிட்டுக்குருவியை வளர்க்க பெரிய அளவில் முயற்சி எடுத்தார். சிட்டுக்குருவி அழிந்து வரும் இனம் என ஐ.நாவை அறிவிக்க வைத்ததில் முக்கிய பங்கு இவருடையது. 2009ல் அறிஞர்கள் ஒன்றுக்கூடி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ந்தேதி சிட்டுக்குருவி தினமாக அறிவித்து சிட்டுக்குருவியை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்தார்கள். அதன்படி 2010ல் இருந்து செய்தும் வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு பணியில் அரசு 98 சதவிதம் கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு கவனிக்கதக்கது.

 

sparrow day



சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ, விவசாய நிலங்களை அழிக்கும் பறவை இனங்கள் எதுயென கண்டறிந்து கொன்றுவிடுங்கள் என தனது அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர் போட்ட உத்தரவால் சீனாவில் அதிகம் பாதிக்கப்பட்டது சிட்டுக்குருவி. பின், காலம் கடந்து அது தவறென தெரிந்து, சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்பதை உணர்ந்து அதனை அழிப்பதை சீனா நிறுத்தியது.

உலகளவில் ஏற்கனவே பறவையினங்களில் மைனா, பருந்து, ஆந்தை, மயில் போன்றவை அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலில் உள்ளது. தற்போது சிட்டுக்குருவியையும் இடம் பிடிக்க வைத்துள்ளோம்.

ஏய் குருவி, சிட்டுக்குருவி என்கிற பாடல் வழியாகத்தான் வருங்கால தலைமுறை சிட்டுக்குருவியை கேட்டும், புகைப்படமாக பார்த்து வளர வேண்டிய கட்டாயத்தில் நாம் இந்த உலகை மாற்றியுள்ளோம் என்பதை நினைத்து வெட்கப்படவேண்டும். சிட்டுக்குருவி இனத்தை பெருக்க சில தனியார் அமைப்புகள் உலகம் முழுவதும் அதனை வளர்க்கவும், பாதுகாக்கும் பணியில் கிராம மக்களை ஈடுப்படுத்தி வருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. முடிந்தால் நாமும் சிட்டுக்குருவி நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டினால் அதனை அகற்றாமல் வாழ வழிச்செய்வோம்.  

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.