Skip to main content

இளைஞர் தயாரித்த கரோனா குடை... விலை எவ்வளவு தெரியுமா..?

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

 

ப



இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த வினித் குமார் என்ற இளைஞர் கரோனா குடையைத் தயாரித்துள்ளார்.நார்மலாக நாம் பயன்படுத்துவதைப் போன்று தான் உள்ளது அந்தக் குடை. ஆனால் குடையில் உள்ள ஒரு பொத்தான அழுத்தினால் அந்தக் குடை விரிவதுடன் நம் கால் வரை பிளாஸ்டிக்கால் ஆன கவர் வருகின்றது. மேலும் மற்றொரு பட்டனை அழுத்தினால் குடையின் மேல் இருந்து கிருமி நாசினி குடையின் கீழ் இருப்பவர்கள் மீது தெளிக்கும்.மேலும் இந்தக் குடையை சிஎஸ்ஐஆர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் வினித் குமார் தெரிவித்துள்ளார். இதன் விலை ரூபாய் 300 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.