Skip to main content

தூக்கம் கெடுக்கும் கனவுகளுக்கு? என்ன பரிகாரம்?

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொதுவாக மனிதர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும்; கஷ்டங்கள் இல்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால் பலருக்கு சரியாகத் தூக்கம் வராது. தூக்கத்தின்போது நிறைய கனவு காண்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தையும், 12-ஆம் பாவத்திலுள்ள கிரகங்களையும் நாம் பார்க்கவேண்டும். 12-ஆம் வீட்டில் பாவகிரகம் இன்னொரு பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது இன்னொரு பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
 

lord krishna

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் பாவகிரகங்கள் இருந்தால், பாவகர்த் தாரி யோகம் உண்டாகும். அதனால் இரவில் தூங்கும்போது ஆழ்மனம் வேலைசெய்து, அந்த மனிதருக்கு முற்பிறவி ஞாபகங்களும், மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்களும் கனவுகளாக மாறி அதிகாலை வேளையில் தொல்லைகளைத் தரும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 6, 8, 12-ல் சனி இருந்து, அந்த சந்திரன் 11, 6, 8-ல் இருந்தால், அவருக்கு அதிகாலை மூன்று மணிக்குப் பிறகு உருப்படியில்லாத கனவுகள் அதிகமாக வரும். அதனால் அவரால் தூங்க முடியாது.
 

temple

ஒருவர் வீட்டில் வடக்கு திசையில் அவசிய மற்ற குப்பைகள் அல்லது பொருட்களைத் தேக்கி வைத்திருந்தால், அங்கிருப்பவர்களுக்கு சரியாகத் தூக்கம் வராது. வீட்டின் வடமேற்கு திசையில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந் தால் அங்கிருப்பவர்களுக்கு பல நோய்களும் வரும். பயம் உண்டாகும். பயத்தை உண்டாக்கும் கனவுகள் வரும். அந்த வீட்டின் பூஜையறை மேற்கு திசையில் வடமேற்கில் இருந்து, பூஜை செய்யப்படும் கடவுளின் முகம் கிழக்கு பார்த்தவாறு இருந்தால், அங்கிருப்பவர்களுக்கு சரியாகத் தூக்கம் வராது. பல காரியங்கள் நடப்பதற்கு முன்பே கனவில் அவர் களுக்குத் தோன்றும். அதனால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
 

temple


ஒரு ஜாதகத்தில் 12-ல் ராகு, சனி இருந்து, லக்னத்தில் செவ்வாய் அல்லது சூரியன் இருந்தால், அவர் கடுமையாக உழைத்துவிட்டு வீட்டிற்கு தாமதமாகவந்து படுப்பார். தான் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி அவர் தூக்கத்தில் நினைப்பார். அவருக்கு அப்போதும் தான் வேலை செய்துகொண்டிருப்பதைப்போல தோன்றும். அதனால் தூக்கம் கெட்டுவிடும். அதுவும் அதிகாலை வேளையில் கனவுகள் தோன்றும். 12-ல் இருக்கும் ராகு, சனி அவருடைய தூக்கத்தில் பல சிந்தனைகளையும் உண்டாக்குவர்.
 

ஒருவர் ஜாதகத்தில் தேய்பிறைச் சந்திரன் 11-ல் இருந்து, 12-க்கு அதிபதி லக்னத்தில், லக்னாதிபதியுடன் இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங் களையும் அனுபவித்திருப்பார். அதனால் பணம் வந்து சேர்ந்தபிறகும், அது தன்னிடம் இருக்குமா அல்லது கையைவிட்டுப் போய் விடுமா என்ற எண்ணம் எப்போதும் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். தான் அனுபவித்த கஷ்டங்கள் மீண்டும் தன் வாழ்க் கையில் வருவதைப்போல கனவுகாண்பார்.
 

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் புதன், 2-ல் செவ்வாய், 6-ல் சனி இருந்தால் அந்த ஜாதகர் கடுமையாக உழைப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். ஆனால் அவரை அவருக்கு நெருக்கமானவர்கள்கூட ஏமாற்றி விடுவார்கள். அதனால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. அதுவும் அதிகாலை வேளையில் படிக்கட்டு, இருட்டறை, நீரில் மாட்டிக்கொண்டிருப்பது... இப்படிப்பட்ட கனவுகளைக் கண்டுகொண்டிருப்பார்.
 

லக்னத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் இருந்து, சந்திரன் 11-ல் இருந்தால், இரவு நேரத்தில் காற்று சரியாக வராவிட்டால் அவருக்குத் தூக்கம் கெட்டுவிடும். பல கனவுகளையும் காண்பார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரியில்லா மலிருந்தால், சந்திரன், சனியுடன் 12-ல் இருந்தால் அல்லது சந்திரனை சனி பார்த்தால், அவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சரியாகத் தூக்கம் வராது. பல கனவுகள் காண்பார். ஒருவர் தான் படுக்கும் இடத்தில் பல பொருட் களையும் பரப்பி வைத்திருந்தால் அல்லது தேவையற்ற பொருட்களை கட்டிலுக்கு அடியில் போட்டு வைத்திருந்தால் அவருக்கு ராகு, சந்திரன் சரியில்லை என்று பொருள். அதனால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.

ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் 2, 6, 11-ல் இருந்து அந்த கிரகங்கள் சந்திரனுக்கு கேந்திரமாக இருந்தால், அதாவது- சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அதிலும் குறிப்பாக சந்திரன், லக்னம் 6, 8, 11-ல் இருந்தால், அவர் எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்வதைப்போல கனவுகாண்பார். சில நேரங்களில் அவருக்கு விந்து வெளிப்பட்டு தூக்கம் கலைந்துவிடும். வீட்டில் நீர் பருகும் பானை தெற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்தால், அந்த வீட்டில் முன்னோர்களின் தோஷம் இருக்கும். அவர்கள் கனவில் வருவார்கள்.அவர்கள் பேசுவதைப்போல் இருக்கும். அதனால் தூக்கம் வராது.
 

பரிகாரங்கள்

படுப்பதற்கு முன்பு வாயை நன்கு கழுவவேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும். நீர் பருகவேண்டும்.

கனவுகள் அதிகமாக வந்தால் நான்கு பூண்டுத்துண்டுகளை தலையணைக்குக்கீழே வைத்துப் படுக்கவேண்டும். (உடைந்த பூண்டு).

ஒரு சிறிய சுத்தியை தலையணைக்குக்கீழே வைத்துக்கொண்டு படுக்கலாம்.

தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும். அப்போது தன் விருப்பத்திற்குரிய கடவுளின் மந்திரத்தைக் கூறவேண்டும்.

ஆஞ்சனேயரின் பெயரைக் கூறிவிட்டுப் படுப்பது நல்லது.

வெளிர்நிற ஆடைகளையே அணிய வேண்டும்.

படுக்கையறையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதை மூடிவிட்டுப் படுக்கவேண்டும்.

வீட்டின் தென்மேற்கில் நீர் இருக்கக்கூடாது. படுக்கும் இடத்தின் வடமேற்கில் நீர் பிடித்து வைக்கக்கூடாது.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.