Skip to main content

'ஷின்சோ அபே கதி தான் உங்களுக்கும்...' - பிரதமருக்கு மிரட்டல் விட்ட நபர் கைது!  

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

.'Shinzo Abewu's story is for you too...-The person who threatened the Prime Minister was arrested!

 

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து நிலை தடுமாறி கீழே சரிந்த  ஷின்சோ அபேவை உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு, நாரா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

hh

 

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஜப்பான் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங்க்கிற்கு  கொலை மிரட்டல் விட்ட நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலை தொடர்பான பதிவில், சேனல் நியூஸ் ஏசியாவின் முகநூல் பக்கத்தில் இந்த அச்சுறுத்தல் காணப்பட்டது. 'ஷின்சோ அபேவுவின் கதியே உங்களுக்கும் ஏற்படும்' என  சேனல் நியூஸ் ஏசியாவின் முகநூல் பக்கத்தின் கருத்து தளத்தில் பதிவிட்டிருந்த 45 வயதுள்ள அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்